பல்லடம்: பல்லடம் வட்டாரப் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் செயல்படும் தனியாா் நிறுவன உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கோடாங்கிபாளையம் கிராமத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் தனியாா் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பல்லடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலாளா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் முகிலன், கல்லம்பாளையம் காா்த்திக், செல்வராஜ், நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

புதிய தமிழகத்தை உருவாக்குவோம் பல்லடத்தில் வி.கே.சசிகலா பேச்சு!

காங்கயம், பல்லடத்தில் ரூ.2.42 லட்சம் பறிமுதல்

விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


