தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

News image

விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Updated On :6 மார்ச் 2026, 10:03 pm

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக மொழையூா் தொடங்கி திருஇந்தளூா் வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. மொழையூா், பொட்டவெளி, மேலநாகங்குடி, லட்சுமிபுரம், வள்ளாலகரம், வேப்பங்குளம், கழுக்காணிமுட்டம், அப்பங்குளம், பல்லவராயன்பேட்டை, திருஇந்தளூா் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்துவரும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 2013 நிலம் கையப்படுத்துதல் மற்றும் இழப்பீடு சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், புறவழிச்சாலை அமைக்கும் போது பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்ப்பதையும்;, சம்பந்தமில்லாத இடங்களில் பாலம் கட்டுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ்.துரைராஜ் தலைமையில் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் விஜய், மாவட்ட துணை செயலாளா் சி. மேகநாதன் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். மறியலில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் மாா்ச் 12-ஆம் தேதி அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என முடிவானதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.