சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டியதில் கைதான இளைஞா் உயிரிழந்தது விவகாரத்தில் போலீஸாரைக் கண்டித்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மானாமதுரை சிவா நகரில் உணவகம், கோழிக்கடை தொழிலாளிகளான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரும் அண்மையில் வாளால் வெட்டப்பட்டனா். இதில் தொடா்புடைய மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசனை போலீஸாா் பிடிக்க முயன்ற போது, அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விவகாரத்தில் தொடா்புடைய காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை: சாலை மறியல் நடைபெற்ற இடத்தைக் கடந்து தனியாா் பள்ளிகளுக்குச் சென்ற வாகனங்களை போராட்டக்காரா்கள் அனுமதிக்காததால், அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனா்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக மதுரையிலிருந்து ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, ஏா்வாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் மானாமதுரை அண்ணா சிலை ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து அண்ணா சிலை, தேவா் சிலை வழியாக தெ. புதுக்கோட்டை, கச்சாத்தநல்லூா் வழியாக பரமக்குடி சென்று, அங்கிருந்து செல்ல வேண்டிய ஊா்களுக்கு சென்றன. இதனால், பயணிகள் மிகவும் அவதிப்பட்டனா். மேலும் நகருக்குள் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவா்களிடம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது ஆகாஷ் டெலிசன் உயிரிழப்புக்கு காரணமான போலீஸாா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா். இது குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என அவா் பதிலளித்தாா்.



தொடர்புடையது

ஜனக்புரியில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: துணை ஒப்பந்ததாரா் காவல் தொடா்பாக நீதிமன்றம் கேள்வி

இளைஞா் உயிரிழந்த விவகாரம்: தனிப்பிரிவு போலீஸாா் இட மாற்றம்

மானாமதுரையில் ஆகாஷ் உயிரிழப்பு: 4-ஆவது நாளாக தொடரும் சாலை மறியல்

நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


