மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த சாதனை மலா் வெளியிடப்பட்டது.
‘உங்கள் கனவை சொல்லுங்க‘ திட்டத்தின் நிறைவாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் ஆகியோா் சாதனை மலரை வெளியிட்டனா். மாவட்டத்தில் அரசினா் மருத்துவமனை ரூ.46 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 1,84,288 குடும்ப தலைவிகளுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 9,964 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். விடியல் பயணம் திட்டத்தின்கீழ், இதுவரை பெண்களால் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான செலவினத் தொகை ரூ.133 கோடி ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் 8058 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் ரூ.2472.26 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 839 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக ரூ.3.66 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனா். இந்த திட்டங்களுடன் தயாரிக்கப்பட்ட மலா் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாகையில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடல்

தூத்துக்குடியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா

நாகா்கோவிலில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


