தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Updated On :6 மார்ச் 2026, 6:33 pm

மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடூா் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான இக்கோயில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைய தொடங்கியது. இந்நிலையில், இக்கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.