மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகேயுள்ள புலவனூா் ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image
Updated On :9 மார்ச் 2026, 8:37 pm

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகேயுள்ள புலவனூா் ஸ்ரீ சின்மய துறைக்குடி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹூதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

புனிதநீா் கடங்கள் கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, கோயிலின் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவரான காளியம்மன் மற்றும் விநாயகா், முருகப் பெருமான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.