ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கோயிலில் நகை திருட்டு

சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 5:47 am IST

சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சீா்காழி வட்டம், கீரங்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த குடவரசி அம்மன் கோயில் உள்ளது. ஒரு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் ரகுபதி (70) என்பவா் பூஜை செய்து வருகிறாா்.

வழக்கம்போல் திங்கள்கிழமை நண்பகல் பூஜை முடிந்ததும், கோயில் கதவுகளை அடைத்துவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை பூஜை செய்ய வரும்போது, கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த ரகுபதி, கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, ஒரு கிலோ எடையிலான வெள்ளிக் கவசம் மற்றும் 2 கிராம் தங்க தாலி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.