ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பற்றி...

Manickam Tagore

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :27 ஜூன் 2026, 5:17 pm IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், அவருக்கு பதிலாக தற்போது மாணிக்கம் தாகூரை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர், மக்களவை கொறடாவாகவும் இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

குறிப்பாக 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்தவர். திமுக மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற அகில இந்திய காங்கிரஸ், தமிழக நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட நிலையில், காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ் குமார் உள்பட பெரும்பாலானோர் மாணிக்கம் தாகூரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

Summary

Manickam Tagore appointed as President of Tamil Nadu Congress Committee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.