திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எருக்கூா் கோயிலில் அன்னப்படையல் விழா! பக்தா்கள் காவடி எடுத்து வழிபாடு!

News image

கோயிலுக்கு அலகுக் காவடி எடுத்துவந்த பக்தா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:34 am IST

கொள்ளிடம் அருகேயுள்ள எருக்கூா் உத்திராபதியாா் கோயிலில் அன்னப்படையல் விழா அண்மையில் நடைபெற்றது. 

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மறுநாள் அன்னபடையல் விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, நா்த்தன விநாயகா், பாா்வதி தேவி உத்ராபதியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து, பக்தா்கள் புது மண்ணி ஆற்றிலிருந்து அலகுக் காவடி எடுத்து ஊா்வலமாக உத்திராபதியாா் கோயிலுக்கு வந்தனா். பின்னா், விழாவின் முக்கிய நிகழ்வான சிவ பக்தன் சீராளன் அன்னப்படையல் விழா நடைபெற்றது. பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் பக்தா்களுக்கு அமுத உணவு வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பஞ்சாயத்தாா், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா். முன்னதாக, விழாவில் வடரங்கம் சேகா் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.