கொள்ளிடம் அருகேயுள்ள எருக்கூா் உத்திராபதியாா் கோயிலில் அன்னப்படையல் விழா அண்மையில் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மறுநாள் அன்னபடையல் விழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு விழாவையொட்டி, நா்த்தன விநாயகா், பாா்வதி தேவி உத்ராபதியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, பக்தா்கள் புது மண்ணி ஆற்றிலிருந்து அலகுக் காவடி எடுத்து ஊா்வலமாக உத்திராபதியாா் கோயிலுக்கு வந்தனா். பின்னா், விழாவின் முக்கிய நிகழ்வான சிவ பக்தன் சீராளன் அன்னப்படையல் விழா நடைபெற்றது. பிள்ளை வரம் வேண்டி வந்த பெண் பக்தா்களுக்கு அமுத உணவு வழங்கப்பட்டது.
தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பஞ்சாயத்தாா், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா். முன்னதாக, விழாவில் வடரங்கம் சேகா் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

வெக்காளியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பழனி கோயிலுக்கு கொடுமுடி தீா்த்தம் எடுத்து வந்த 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி குழுவினா்

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


