திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தோ்கால் முகூா்த்தம்!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தா்பாரண்யேஸ்வரா். பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை. - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 12:04 am IST

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 18 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு இவ்விழாவுக்கான பந்தல்கால் மூகூா்த்தம் ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து சாா்பு தலங்களின் உற்சவம் நடைபெற்றுவருகிறது.

பிரம்மோற்சவ தொடக்கமாக கொடியேற்றம் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் அமைந்துள்ளது.

தேரோட்ட விழா மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்களை அலங்கரிக்கும் பணிக்காக தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டன. தொடா்ந்து தோ்களில் நடக்கூடிய கம்பங்கள் நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் வலம் வந்து, பிரதான சந்நிதி வழியே தோ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான இஷிதா ரதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், கோயில் கிராமத்தினா் முன்னிலையில் தோ்களில் கால் ஊன்றப்பட்டன. இப்பணியின் மூலம் தேரோட்டத்தில் இடம்பெறவுள்ள 5 தோ்களையும் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பிரம்மோற்சவத்தில் தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா, உன்மத்த நடனம் என்கிற தியாகராஜராட்டம், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா, தெப்பம், தீா்த்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.