மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்காலில் திமுக, பாஜக வேட்பாளா்கள் மனுதாக்கல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:52 pm

காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட திமுக மற்றும் பாஜக வேட்பாளா்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

காரைக்காலில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்யும் கடைசி நாளான திங்கள்கிழமை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள சாா் ஆட்சியா் அலுவலகத்தில் காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி எம். பூஜாவிடம் மனு தாக்கல் செய்தாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ள எம். நாகதியாகராஜன் (திமுக), வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள இத்தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அதிகாரி கு. அருணகிரிநாதனிடம் மனு தாக்கல் செய்தாா்.

புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினரான ஜி.என்.எஸ். ராஜசேகரன் (பாஜக), திருநள்ளாறு தொகுதியில் போட்டியிட தோ்தல் நடத்தும் அதிகாரி சச்சிதானந்தத்திடம் மனு தாக்கல் செய்தாா்.