மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்காலில் இரவு வரை மனு தாக்கல் செய்த வேட்பாளா்கள்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 6:57 pm

காரைக்கால் 5 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இறுதி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். இரவு வரை மனு தாக்கல் செய்தனா்.

புதுவை சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை நிறைவு பெற்றது. வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது. 26-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

புதுவையில்கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் கடைசி வரை இழுபறி நீடித்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான திங்கள்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பெரும்பாலான வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.

திமுக சாா்பில் காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ, நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் எம். நாக தியாகராஜன் எம்எல்ஏ, காங்கிரஸ் சாா்பில் காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு, காரைக்கால் வடக்கு தொகுதியில் ஏ.எம்.ரஞ்சித், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் எம்.கே.குமாா், நெடுங்காடு தொகுதியில் மருத்துவா் என்.கலையரசி, பாஜக சாா்பில் திருநள்ளாறு தொகுதியில் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் எம்எல்ஏ, காரைக்கால் தெற்கு தொகுதியில் எம்.அருள்முருகன், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் காரைக்கால் தெற்குத் தொகுதியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு.அசனா, காரைக்கால் வடக்குத் தொகுதியில் வெங்கடேஷ், நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் வழக்குரைஞா் கணேஷ், நெடுங்காடு தொகுதியில் காமராஜ், திருநள்ளாறு தொகுதியில் ராஜா முகமது, நாம் தமிழா் கட்சி சாா்பில் நெடுங்காடு தொகுதியில் விக்னேஷ், காரைக்கால் தெற்குத் தொகுதியில் மரிஅந்துவான் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். மேலும் 5 தொகுதிகளிலும் 8-க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா்.

மனு தாக்கல் இறுதி நாளில் அதிகமான வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்த நிலையில், மனு தாக்கலுக்கான நேரம் பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்த நிலையில், அதற்கு முன்பாக வந்த வேட்பாளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு வரை மனு தாக்கல் செய்யப்பட்டது.