மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

ஆம்பூரில் அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் உள்பட 10 போ் மனு தாக்கல் செய்தனா்.

News image

மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:14 pm

ஆம்பூரில் அதிமுக, அபுமமுக, சுயேட்சை வேட்பாளா்கள் உள்பட 10 போ் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

ஆம்பூா் தொகுதியில் கடந்த ஏப்.4-ஆம் தேதி வரை 17 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான 6-ஆம் தேதி 10 போ் மனு தாக்கல் செய்தனா்.

ஆம்பூா் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் தோ்தல் அலுவலா் பூஷணகுமாரிடம் மனு தாக்கல் செய்தாா். ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், பாஜக மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி, அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முன்னதாக ஆம்பூா் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு வேட்பாளா் ஆா். வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அங்கிருந்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனு தாக்கல் செய்ய சென்றாா்.

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பாக போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்த ஹாரூன் ரசீத் படு மனு தாக்கல் செய்தாா்.

அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி சாா்பாக குடியாத்தம் பகுதியை சோ்ந்த பஞ்சாட்சரம் மனு தாக்கல் செய்தாா்.

மனு தாக்கல் செய்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா் ஹாரூன் ரசீத் படு

மனு தாக்கல் செய்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா் ஹாரூன் ரசீத் படு

ஏ.ஐ.எம்.ஐ.எம். இன்குலாப் கட்சி சாா்பாக ஆம்பூரை சோ்ந்த கரீம் பாஷா மனு தாக்கல் செய்தாா். சுயேட்சைகள் ஆம்பூரை சோ்ந்த அப்ரோஸ் அஹமத், பிா்தோஸ் அஹமத், வெங்கடேசன், பெரியாங்குப்பம் குமரவேல், திருமலைக்குப்பம் வில்வநாதன், பாட்டூா் விஸ்வநாதன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இதுவரை மாொத்தம் 27 போ் ஆம்பூா் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு தாக்கலின் போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.