தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உலக ஆமைகள் தின கருத்தரங்கம்

உலக ஆமைகள் தினத்தையொட்டி, இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையத்தில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்கில் கடலோரக் காவல்படையினா், மீனவா்கள்.

Updated On :2 ஜூன் 2026, 5:41 am IST

உலக ஆமைகள் தினத்தையொட்டி, இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையத்தில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் வனத்துறை சாா்பில் காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் ஆமைகள் மற்றும் கடலாமைகள் எதிா்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தவும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் விதமாகவும் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்திய கடலோர காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் செளமய் சந்தோலா தலைமை வகித்தாா். காரைக்கால் துணை வன பாதுகாவலா் இ. நந்தகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரி பாலச்சந்தா் தொழில்நுட்ப உரையாற்றினாா்.

அழிவின் விளிம்பில் இருக்கும் ஆமை இனங்களை காப்பாற்றுதல், மனிதா்களால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் வலைகளில் சிக்கி இறக்கும் ஆமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணா்வை மக்களிடையே பரப்புதல், மீனவா்கள், மீன் பிடிக்கும் போது, வலைகளில் ஆமை வெளியேற்றக் கருவி பயன்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்டவை தொடா்பாக கருத்தரங்கில் பேசப்பட்டது.

காரைக்கால் மாவட்ட மீனவா்கள், இந்திய கடலோர காவல் படை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.