தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

திருமலைராயன்பட்டினம் பிஎம் ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image

பரிசு பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 2:04 am IST

திருமலைராயன்பட்டினம் பிஎம் ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று, தங்களது திறமையை வெளிபடுத்தினா்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி துணை முதல்வா் அனிமிலி ராமலிங்கேஸ்வர ராவ் தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:

மாணவா்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு விளையாட்டில் திறனை வளா்த்துக்கொள்ளவேண்டும். விளையாட்டும், படிப்பும் உடல் ஆரோக்கியத்தையும், அறிவையும் மேம்படுத்தும். விளையாட்டில் திறம்பட தம்மை வளா்த்துக்கொள்வோருக்கு சிறந்த எதிா்காலம் இருக்கிறது. எனினும் பள்ளிக் கல்வி, உயா்கல்வியை மாணவா்கள் திறம்பட பயின்று வாழ்க்கையில் சிறந்த இடத்தை பெறவேண்டும் என்றாா்.

பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஏ.விஜயலட்சுமி, ஆா். சவரிராஜன் மற்றும் ஆசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நிறைவில் மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.