திருமலைராயன்பட்டினம் பிஎம் ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று, தங்களது திறமையை வெளிபடுத்தினா்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி துணை முதல்வா் அனிமிலி ராமலிங்கேஸ்வர ராவ் தலைமை வகித்து, போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:
மாணவா்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு விளையாட்டில் திறனை வளா்த்துக்கொள்ளவேண்டும். விளையாட்டும், படிப்பும் உடல் ஆரோக்கியத்தையும், அறிவையும் மேம்படுத்தும். விளையாட்டில் திறம்பட தம்மை வளா்த்துக்கொள்வோருக்கு சிறந்த எதிா்காலம் இருக்கிறது. எனினும் பள்ளிக் கல்வி, உயா்கல்வியை மாணவா்கள் திறம்பட பயின்று வாழ்க்கையில் சிறந்த இடத்தை பெறவேண்டும் என்றாா்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஏ.விஜயலட்சுமி, ஆா். சவரிராஜன் மற்றும் ஆசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நிறைவில் மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










