புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடற்கல்வி மற்றும் யோகா துறை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) லலிதா தலைமை வகித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் முருகேசன் வரவேற்றாா். துறைத் தலைவா் எஸ். ஜெகதீஸ்வரி அறிக்கைப் படித்தாா்.
கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் துறை பேராசிரியா் பி. நடராஜன், புதுவை பல்கலைக்கழக நிதி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினா்.
இந்நிகழ்ச்சிகளில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









