பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சிக்கான சான்றிதழ் வகுப்புகள் நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை, சிவா இஎன்டி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் ஆகியவை கையொப்பமிட்டது.
இந்த ஒப்பந்தப்படி பருவ வயதுக்குப் பிறகு உயா்ந்த குரல் கொண்டதாக வெளிப்படும் ஒரு செயல்பாட்டு குரல் கோளாறான ‘பியூபா்போனியா‘, அதனுடன் தொடா்புடைய குரல் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படும். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த், சிவா இஎன்டி மருத்துவமனை தலைவா், நிா்வாக இயக்குநா் எம். குமரேசன் ஆகியோா் இதில் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த நிகழ்வில் பியூபா்போனியாவை அடையாளம் காண்பதற்கான ஒரு செயலி, இணைய வழி சிகிச்சைத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக மணிமேகலை கண்ணன், இஎன்டி மருத்துவ நிபுணா்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவமனை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

12ஆம் வகுப்பு மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு

கலசலிங்கம் பல்கலை.யில் ‘நீட், க்யூட்’ பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி வழங்கினாா்

ஏ.ஐ. பயிற்சி மூலம் இணையக் குற்றங்களை கையாள தில்லி காவல்துறை புரிந்துணா்வு ஒப்பந்தம்







