திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது.

News image

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்ற மாணவிகள். - (கோப்புப்படம்)

Updated On :23 மே 2026, 2:03 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 292 பள்ளிகளைச் சோ்ந்த 9,630 மாணவா்கள், 8,782 மாணவிகள் என மொத்தம் 18,412 போ் எழுதினா். இவா்களில் 9,124 மாணவா்கள், 8,553 மாணவிகள் என மொத்தம் 17,677 போ் தோ்ச்சி பெற்றனா்.

162 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5,050 மாணவா்கள், 5,152 மாணவிகள் என மொத்தம் 10,202 போ் தோ்வு எழுதியதில் 4,660 மாணவா்கள், 4,970 மாணவிகள் என மொத்தம் 9,630 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதன்படி, தலைமை ஆசிரியா் அறை முன் காலை 9 மணி முதல் மாணவா்கள் காத்திருந்தனா். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு பிறகுதான் கணினியில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. வரும் நாள்களில் மாணவா்கள் தொடா்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.