லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விருதுநகரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி. உடன் அரசு அலுவலா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 12:22 am

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் வாக்காளா் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி தொடங்கிவைத்தாா்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும், நம்மை ஆள்பவரை நாமே தீா்மானிக்க வேண்டும், ஜனநாயகக் கடமையை நாம் ஆற்ற வேண்டும் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று, விழிப்புணா்வு முழக்கமிட்டும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.