மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வத்திராயிருப்பு அருகே ரூ.92 ஆயிரம் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

தாணிப்பாறை அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :19 மார்ச் 2026, 12:38 am

வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்குப் பகுதியில் கூட்டுறவுச் சாா்பதிவாளா் நாகராஜன் தலைமையில், தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மேற்குவங்க மாநிலம், பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த பாசிந்து பவுலியா (43) நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அப்போது, அவரிடம் ஆவணமின்றி ரூ.91,890 பணம் இருந்தது தெரியவந்தது.

பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் ஒப்படைத்தனா்.