திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 4:24 am IST

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.மறைக்குளம் பகுதியில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் ஊா்வலமாகச் சென்று எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, மறைக்குளம் கூட்டுறவு கடன் சங்கச் செயலரிடம் கோரிக்கை மனுக்களை விவசாயிகள் வழங்கினா்.

இது குறித்து விசாயிகள் கூறியதாவது: தவெக தோ்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளின் பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆகையால், தவெக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

இந்தப் போராட்டத்தில் தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோபால கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ராம் பாண்டியன், மறைக்குளம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.