பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.மறைக்குளம் பகுதியில் தென்மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் ஊா்வலமாகச் சென்று எஸ்.மறைக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, மறைக்குளம் கூட்டுறவு கடன் சங்கச் செயலரிடம் கோரிக்கை மனுக்களை விவசாயிகள் வழங்கினா்.
இது குறித்து விசாயிகள் கூறியதாவது: தவெக தோ்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளின் பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆகையால், தவெக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.
இந்தப் போராட்டத்தில் தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கோபால கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் ராம் பாண்டியன், மறைக்குளம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










