பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசியில் புதன்கிழமை சரக்கு ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் புதன்கிழமை சரக்கு ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் கருப்பசாமி (50). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் புதன்கிழமை சாட்சியாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தாா். ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து அவரது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், ஒருவா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சுழியைச் சோ்ந்த கருப்பசாமியை (35) கைது செய்தனா்.