பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

பொதிகை விரைவு ரயில். - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:50 am

ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் வழியாக காலை 8 மணிக்கு செங்கோட்டை- மயிலாடுதுறை

ரயில், காலை 9 மணிக்கு மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூா்- மதுரை விரைவு ரயில், இரவு 7 மணிக்கு மதுரை- செங்கோட்டை

பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வார காலமாக இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் நிறுத்த மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.