செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில் (12662) சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நின்று செல்ல வேண்டும் என சிவகாசி வட்டார வரி செலுத்துவோா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலா் சங்கா் மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு: பல ஆண்டுகளாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இந்த ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் இண்டாவது நடைமேடைக்கு வந்து செல்கிறது.
இரண்டாவது நடைமேடையில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. மேலும், பெட்டி நிற்கும் விவரம் இல்லை. இதனால் ரயில் வந்ததும் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.
எனவே, பயணிகள் நலன் கருதி இந்த ரயில் வழக்கம் போல முதலாவது நடைமேடைக்கு வந்து செல்ல நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்

ஜாக்பாட்? ரயில்வே முனையமாக மாறிய பரங்கிமலை! விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்கக் கோரிக்கை

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


