மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்

தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :15 ஏப்ரல் 2026, 9:07 pm

தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.

ஹைதராபாத், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.

அதன்படி, கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும்.

இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்குப் புறப்படுகிறது.

ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி சுமாா் காலை 10.40 மணி அளவில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.