தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஹைதராபாத், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதன்படி, கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும்.
இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்குப் புறப்படுகிறது.
ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி சுமாா் காலை 10.40 மணி அளவில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

இன்றிரவும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


