விருதுநகரில் வாகை சூடப்போவது யார்? தொகுதி அலசல்
"கிங் மேக்கர்' என்று அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் கடந்த 1967ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப் பிறகு புதிய பேரவைத் தொகுதியாக உருவானது. அதற்கு முன்பு வரை சாத்தூர் தொகுதியுடன் இணைந்திருந்தது.










