திருச்சுழியில் திமுக சார்பில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் தங்கப்பாண்டியன் திடலில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலர் பொன்னுதம்பி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் ரூபசுந்தரி, முன்னாள் தொண்டரணி துணை அமைப்பாளர் பிச்சைநாதன், வழக்குரைஞரணி ரெங்கராஜன், கல்லூரணி சிவநாராயணன் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி வரவேற்றார். தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.