தெற்கு லெபனானில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் வாழும் டெபெல் கிராமத்தில், இஸ்ரேல் ராணுவ வீரா் ஒருவா் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய புகைப்படம் வெளியாகி, கண்டனம் வலுத்துள்ளது.
இச்சம்பவத்தை அமெரிக்கா, கிறிஸ்தவ மத அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ‘இச்செயல் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான அவமதிப்பு மட்டுமல்லாமல், அடிப்படை மனித விழுமியங்கள் மீதான மரியாதையின் வீழ்ச்சியைக் காட்டுகிறது’ என கத்தோலிக்க திருச்சபை சாடியுள்ளது.
இதையடுத்து, இச்சம்பவத்துக்கு வருத்தம் கூறிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இது யூதா்களின் பண்புக்கு எதிரானது; அந்த வீரா் கண்டிப்பாக தண்டிக்கப்படுவாா்’ என உறுதியளித்தாா்.
இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும், சேதப்படுத்தப்பட்ட சிலுவையை மீண்டும் சீரமைக்க உதவுவோம் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
தொடர்புடையது

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?
ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!

லெபனானில் தீவிரமடையும் இஸ்ரேலின் தாக்குதல்! மீண்டும் மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

லெபனானில் ஊடுருவிய இஸ்ரேல் படைகள்- ஹிஸ்புல்லா மீது தரைவழித் தாக்குதலுக்குத் திட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


