நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரியாபட்டி பள்ளிகளில் ஆண்டு விழா

விருதுநகர் மாவட்டம், குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியன நடைபெற்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:28 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், குலசேகரநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகியன நடைபெற்றன.

தலைமையாசிரியர் வள்ளுவன் தலைமை வகித்தார். மேலாண்மை குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர் பழனி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவி செல்வி துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ராஜவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை, ஆசிரியர் சதுரங்க ராஜா செய்திருந்தார்.

காரியாபட்டியில் சுரபி அறக்கட்டளை, எஸ்.எஸ்.ஏ. உண்டு உறைவிடப் பள்ளி ஆகியன இணைந்து, ஆண்டு விழாவை கொண்டாடின. மாணவர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் குமார், திட்ட மேலாளர்கள் சண்முகவேல், ஜோயல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பெண் குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் எஸ்.எஸ்.ஏ. கண்காணிப்பாளர் பால்ராஜ், மேற்பார்வையாளர் கோபால், பள்ளி நிர்வாகி மணி, தலைமை ஆசிரியை சுந்தரி, ஆசிரியர்கள் அருள்ராஜ், விஜயலட்சுமி, துணை தலைமை ஆசிரியை ஷீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.