தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்செந்தூருக்கு கிராம மக்கள் பாதயாத்திரை

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே முருக பக்தர்களின் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2014, 6:38 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே முருக பக்தர்களின் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மல்லாங்கிணறு அருகேயுள்ளது சோலைகவுண்டன்பட்டி. இந்த கிராம மக்கள் பெண்கள் உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் 4 மாதங்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்து திரும்புவதை பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழுவை சேர்ந்த வேல்முருகன் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்திலிருந்து கிராம மக்கள் முருகனுக்கு மாலை அணிந்து திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது 52-வது ஆண்டாக சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட கிராம மக்கள் மாலை அணிந்து 120 நாள்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் சென்று முருகனை தரிசனம் செய்து திரும்பி வருகிறோம். கடவுள் பக்தி அதிகரிப்பதுடன் கிராமத்தில் எந்த பிரச்னையும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வளமாக வாழ்ந்து வருகிறோம் என்றார். பூஜை முடிந்ததும் கிராம மக்கள் இரவு 11 மணியளவில் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.

 பூஜைக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.