தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குடிநீர்த் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சரிடம் கோரிக்கை

விருதுநகர் மாவட்ட குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2014, 6:34 pm

விருதுநகர் மாவட்ட குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இதுபற்றி தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் புதன்கிழமை உள்ளாட்சிதுறை அமைச்சரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பருவமழை பொய்த்ததால் விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு செலவிடவேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பெரிய குழாய்கள் மூலம் கொண்டு வந்து விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  மனுவை பெற்றுக்கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் அதுபற்றி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.