தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

Updated On :27 பிப்ரவரி 2014, 6:51 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 54 ஆயிரம் மதிப்பீட்டில் 4 மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாற்று நலஅலுவலர் மணிமாறன், பேரூராட்சி தலைவர் நாகையா, முன்னாள் துணைத் தலைவர் போஸ், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் சைக்கிள்களை வழங்கிப் பேசினார். மாவட்ட திமுக துணைச் செயலாளர் ரூபசுந்தரி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சரஸ்வதி, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாமாணிக்கம், அருப்புக்கோட்டை நவநீதன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சம்பத் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.