தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மர்ம காய்ச்சலால் ஒருவர் சாவு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

Updated On :26 பிப்ரவரி 2014, 6:37 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.

   மல்லாங்கிணர் அருகேயுள்ள திம்மன்பட்டியில் கடந்த 10 நாள்களாக மர்ம காய்ச்சல் நோய் தாக்கி சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

  மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லையாம். இதுபற்றி திம்மன்பட்டி கவுன்சிலர் வீரலெக்கன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு கொடுத்தார். ஆனாலும் சுகாதாரத் துறையினர் எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

 இதனால் மர்ம காய்ச்சல் திம்மன்பட்டி கிராமத்தில் தீவிரமாக பரவி வருவதாகவும் கவுன்சிலர் வீரலெக்கன் கூறினார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம காய்ச்சல் நோய் தாக்கியதால் 10-க்கும் மேற்பட்டோர் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

   நோய் தாக்கம் அதிகமாக உள்ளதாக திம்மன்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் (50) மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் இருந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

   அங்கு சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இனியும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.