சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. நிதியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கு

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:21 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. நிதியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆணையாளர் உமாராணி, தலைமை வகித்தார்.

  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் மணிமாறன் வரவேற்றார். தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., 88 பயனாளிகளுக்கு, ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 250 நிதியில், 3 சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், ஊன்று கோல்கள் வழங்கினார்.

  ஒன்றிய கவுன்சிலர் சேதுராமன், மாற்றுத் திறனாளிகள் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பாலசுந்தரம், திமுக. ஒன்றிய செயலர் பொன்னுதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.