சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சென்னகேசவப் பெருமாள் கோயில் தங்கத் தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் சமேத செங்கமல நாச்சியார் திருக்கோயில் தங்கத் தேரோட்டம்  நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:51 pm

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் சமேத செங்கமல நாச்சியார் திருக்கோயில் தங்கத் தேரோட்டம்  நடைபெற்றது.

        இக் கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழா துவங்கியது. திருவிழாவையொட்டி முனியாண்டி வகையறா மக்களுக்கு பாத்தியப்பட்ட மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.

       இரவு சுமார் 8 மணியளவில் தங்கத் தேரோட்டம் சிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.

     தங்கத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் சென்னகேசவப் பெருமாள், செங்கமலநாச்சியரம்மாள் வலம் வந்தனர். திருக்கோயிலைச் சுற்றி வந்த தங்கத்தேர் பவனி நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.