தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அதிமுக பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக 42-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 அக்டோபர் 2013, 6:43 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக 42-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

     கூட்டத்திற்கு கிளைச் செயலர் பாண்டிமுருகன், ஊராட்சி மன்றச் செயலர் சங்கர சபாபதி, கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளைக் கழக செயலர்கள் கணக்குவேட்டையன், சேதுராமன், ரஞ்சித்குமார், பெரியகருப்பன், சந்திரசேகர், நகரச் செயலர்கள் விஜயன், சொக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரியாபட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமமூர்த்தி, தலைமைக் கழக பேச்சாளர் தர்மராஜன், விவசாயப் பிரிவு செயலர் முத்துப்பாண்டி, மாவட்டக் கவுன்சிலர் விமலா ராஜேந்திரன் உள்பட பலர் பேசினர்.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கார்த்திகா கண்ணன், ஈஸ்வரி கிருஷ்ணன், இந்திரா கிருஷ்ணன், கூட்டுறவு வங்கித் தலைவர் பால்ச்சாமி நாயக்கர், கிளைச் செயலர்கள் பாண்டிமுத்து, முருகன், ஊராட்சி மன்றத் தலைவர் மார்நாடு, கருப்புராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காரியாபட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்தி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.