தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காரியாபட்டியில் நாய்கள் தொல்லை

காரியாபட்டி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

Updated On :7 அக்டோபர் 2013, 7:08 pm

காரியாபட்டி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

 காரியாபட்டி பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நாய்கள் அலைந்து திரிகின்றன. பஸ் நிலையம், பஜார் பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அலைகின்றன. இதனை பிடிப்பதற்கோ, தடுப்பதற்கோ அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றனர்.

 கால்நடை மருத்துவர் கூறும்போது, அக்டோபர், நவம்பர் மாதங்கள் நாய்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த மாதங்களில் நாய்கள் இனப்பெருக்கத்திற்காக கூடுகின்றன. இதை தடுப்பவர்களை நாய்கள் கடிக்கின்றன. கூட்டமாக நாய்கள் நிற்கும்போது அதன் அருகில் செல்லாமல் தூரமாக செல்வது தான் பாதுகாப்பு. இனப்பெருக்கத்தை தடுக்க வருகிறார்களோ என்ற பயத்தில் அவை எதிரே இருப்பவர்களை கடித்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, பொதுமக்கள்தான் விலகிச்செல்ல வேண்டும் என்றார்.

 காரியாபட்டி பகுதியில் அச்சுறுத்தும் வகையில் நாய்களும், போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளும் சுற்றித்திரிவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.