தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 5 சிறுமிகளின் குடும்பத்தினரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல் கூறினர்.

Updated On :25 நவம்பர் 2013, 6:51 pm

அருப்புக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 5 சிறுமிகளின் குடும்பத்தினரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறுதல் கூறினர்.

   விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ராஜகோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்டது போத்தம்பட்டி கிராமம். இக்கிராமத்தின் தெற்கு பகுதியில் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் போத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகள்கள் மாதரசி (13), ரம்யா (9), கோபால்ராஜ் மகள் கலைசெல்வி (14), சண்முகராஜ் மகள் பொன்மணி (15), ராமசாமி மகள் ஆர். ரம்யா (14) ஆகியோர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் போத்தம்பட்டி மற்றும் எம். ரெட்டியபட்டி அரசு பள்ளிகளில் படித்தனர்.

  கடந்த ஞாயிற்றுக் கிழமை குளிப்பதற்காக மாணவிகள் கண்மாய்க்கு சென்றனர். அப்போது கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதி கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்  சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலர் ராமசாமி, முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பொன்னுபாண்டி, அனைந்திந்திய மாணவ பெருமன்ற மாநிலத் தலைவர் செந்தில்குமார், விவசாய சங்க மாவட்ட செயலர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், பழனிக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர்.

  மேலும், உயிரிழந்த மாணவிகளுக்கு விரைவில் அரசு நிவாரண நிதியை வழங்கிட வலியுறுத்துவோம் என்று அவர்கள் கூறினர். திருச்சுழி ஒன்றியக்குழுத் தலைவர் இந்திராமோகன் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதி வழங்கினார். சிவகாசி எம்.பி. மாணிக்கம் தாகூர் கிராமத்திற்கு சென்று பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.