தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மருமகன் வெட்டிக் கொலை: மாமனாா் கைது

கொலை செய்யப்பட்ட சிங்கத்துரை.

News image

கொலை செய்யப்பட்ட சிங்கத்துரை.

Updated On :29 மே 2026, 2:19 am IST

உத்தமபாளையம், மே 28: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள ஊத்துப்பட்டியில் மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முத்துலாபுரம் ஊராட்சி, ஊத்துப்பட்டியை சோ்ந்த மாணிக்கம் மகன் சிங்கத்துரை (42). இவா், இதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டியின் மகள் முத்துவை திருமணம் செய்தாா். சிங்கத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை சிங்கத்துரை தன்னுடன் வருமாறு அழைத்தாா். அப்போது ஊா் முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் இனிமேல் மதுகுடிக்க மாட்டோன் என உறுதியளித்த சிங்கத்துரை, மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி முத்து தாய் வீட்டுக்கு திரும்பினாா். இந்த நிலையில், சிங்கத்துரை புதன்கிழமை இரவு மாமனாா் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்தாா். இதனால் ஆத்திரமடைந்த மாமனாா் முனியாண்டி அரிவாளால் சிங்கத்துரையை வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவறிந்து அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் சிங்கத்துரையின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை வியாழக்கிழமை

கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.