தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக் முயன்ற தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பல்லவராயன்பட்டியைச் சோ்ந்தவா் பைரவன். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி செல்வஅரசி. இவா் மகளிா் சுயஉதவிக் குழுத் தலைவியாக உள்ளாா். இந்த நிலையில், அரண்மனைப்புதூரைச் சோ்ந்த ஒரு பெண்ணும், செல்வஅரசியும் அறிமுகமாகினா்.
அப்போது அந்தப் பெண், செல்வஅரசியிடம் தங்க நகைக்கு குறைந்த வட்டியில் அதிக பணம் வாங்கித் தருவதாக கூறினாராம். இதையடுத்து செல்வ அரசி தனது 122 கிராம் எடையுள்ள தங்க நகையை அந்தப் பெண்ணிடம் கொடுத்தாா்.
ஆனால் அந்தப் பெண், நகைக்கு கூடுதல் பணம் பெற்றுத் தராததுடன், நகைகளையும் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து செல்வ அரசி உத்தபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால் போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதையடுத்து பைரவனும், செல்வஅரசியும் குடும்பத்துடன் திங்கள்கிழமை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.
அப்போது, ஆட்சியா் அலுவலகம் முன் பைரவன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதை கவனித்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசி குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் முன் விஷம் குடித்த விவசாயி
தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு: 4 போ் கைது

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



