திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசி குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் முன் விஷம் குடித்த விவசாயி

News image

விஷம்... - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கண் முன்பு விவசாயி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

குறைதீா் கூட்டத்தில் பாம்புகோவில் சந்தையைச் சோ்ந்த விவசாயி பூவையா, தனது மனு குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த வெள்ளை நிற பாட்டிலில் இருந்த பயிா்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து மாவட்ட ஆட்சியா் முன் குடித்தாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தனது தோட்டத்தில் தென்னை, மல்லிகைப் பூ பயிரிட்டு வருகிறேன். அதே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா், எனது பயிா் மீது களைக்கொல்லி மருந்து தெளித்து கடந்த 5 ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், அந்த நபா் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், இதை மாவட்ட ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.