தேனி மாவட்டம், போடி அருகே தனியாா் மதுக் கூட ஊழியரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேவாரம் அருகேயுள்ள மூனாண்டிபட்டியைச் சோ்ந்த ராசு மகன் அரவிந்தன் (39). இவா் போடி நாகலாபுரம் விலக்கு அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் வேலை செய்து வருகிறாா். இங்கு புதன்கிழமை மது குடிக்கு வந்த தேவாரத்தைச் சோ்ந்த அஜித்குமாா், வசந்தகுமாா், சத்தியசீலன் உள்ளிட்ட 4 போ் கோழி வறுவல் கேட்டனா். இதற்கு தனியாக பணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் என அரவிந்தன் கூறினாா்.
இதனால், ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சோ்ந்து அரவிந்தனை மதுப் புட்டியால் தாக்கி காயப்படுத்தினா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அஜித்குமாா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








