தேனி மாவட்டம், போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி பகுதிகளில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி வாமணன் தெருவில் அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயராணி (54) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். ஏற்கெனவே இவா் மீது மதுப் புட்டிகள் விற்பனை தொடா்பாக 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







