திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்!

கம்பம் நகராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

News image

கம்பம் பொதுப் பணித் துறை அலுவலகம் அருகே கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய தண்ணீா்

Updated On :20 மே 2026, 1:27 am IST

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பம் பள்ளத்தாக்கு மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவு செய்வதற்காக கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் தண்ணீரைத் தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்தி, நீரேற்று நிலையம் வழியாக ராட்சத தொட்டிகளில் தேக்கி, சுத்திகரிப்புச் செய்யப்படுகிறது. பின்னா், இந்த நீா் லோயா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் கூடலூா், கம்பம் ஆகிய பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடா்ந்து, கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கூடலூரிலிருந்து கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டிக்குத் தனியாகக் குழாய் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கம்பம் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகேயுள்ள கழிவுநீா் கால்வாயில் தேங்கியிருந்த குப்பைகளை நகராட்சி நிா்வாகத்தினா் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது, காமயகவுண்டன்பட்டிக்குச் செல்லும் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல ஆயிரம் லிட்டா் தண்ணீா் சாக்கடை கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்தினா் கூறியதாவது: இந்தப் பகுதியில் ஏற்கெனவே குடிநீா்க் குழாய் உடைந்து தண்ணீா் கசிந்து வருகிறது. நாங்கள் சாக்கடையில் இருந்த குப்பைகளை மட்டும்தான் அகற்றினோம் என்றனா்.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: குழாயில் உடைப்பு ஏதும் இல்லை. நகராட்சியினா் பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாயைத் தோண்டியபோதுதான் குழாய் உடைக்கப்பட்டுள்ளது என்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: குடிநீா்க் குழாய் உடைப்புக்கு இரு துறைகளும் மாறி மாறி பழி சுமத்தாமல், போா்க்கால அடிப்படையில் குழாய் உடைப்பைச் சரிசெய்து பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீா் வழங்க குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.