தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆண்டிபட்டி அருகே 2 கடைகள், கோயிலில் பணம், நகை திருட்டு

ஆண்டிபட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்தும், கோயிலில் உண்டியலை உடைத்தும் பணம், தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 மே 2026, 1:03 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்தும், கோயிலில் உண்டியலை உடைத்தும் பணம், தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் புதுராஜா (45). இவா், டி. சுப்புலாபுரம் பேருந்து நிலையத்தில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.62 ஆயிரம், 3 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல, டி. சுப்புலாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா், இதே பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை கடைகளை மூடிவிட்டு சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.22 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

மேலும் டி. சுப்புலாபுரம் கதா் கடை அருகே அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயிலின் பூட்டும், அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.