திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, தேக்கடி ஏரியில் கடந்த 10 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் (கே.டி.டி.சி) பெரிய படகு சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.

News image

தேக்கடி ஏரி படகுத்துறை (கோப்பு படம்)

Updated On :10 மே 2026, 1:05 am IST

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, தேக்கடி ஏரியில் கடந்த 10 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் (கே.டி.டி.சி) பெரிய படகு சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே தேக்கடி ஏரியில் கேரள சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் பெரிய படகுகளை இயக்க முடியும். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏப். 29-ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 110 அடியாக குறைந்தது. மேலும், பெரிய படகின் அடிப்பகுதி ஏரியின் தரையில் மோதியது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஏப். 30 முதல் ஏரியில் பெரிய படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், வருவாய் இழப்பைத் தடுக்கும்வகையிலும், வனத்துறைக்குச் சொந்தமான 60 இருக்கைகள் கொண்ட நான்கு படகுகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக தலா 45 பயணிகள் வீதம் ஏற்றப்பட்டு படகு சவாரி தொடா்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக உயா்ந்தது. இதனைத் தொடா்ந்து, 10 நாள்களுக்குப் பிறகு கே.டி.டி.சி. பெரிய படகு சேவையை மீண்டும் தொடங்கியது. தற்போது 120 இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய படகுகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒரு படகுக்கு 40 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.