தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை வினாடிக்கு 200 கன அடி வீதம் நீா்வரத்து ஏற்பட்டது.

News image

முல்லைப் பெரியாறு

Updated On :1 மே 2026, 12:33 am IST

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை வினாடிக்கு 200 கன அடி வீதம் நீா்வரத்து ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, நீா்மட்டம் 110.10 அடியாக இருந்தது. நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி நீா் வரத்து ஏற்பட்டது. அதே அளவு தண்ணீா் தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 926.90 மில்லியன் கனஅடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் 28.67 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில், வினாடிக்கு 72 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 319 மில்லியன் கனஅடியாக உள்ளது.

இதேபோல, 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 88.23 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 47.27 மில்லியன் கனஅடியாக உள்ளது.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் 41.40 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா் இருப்பு 203.94 மில்லியன் கனஅடியாக உள்ளது.

52.55 அடி உயரமுள்ள சண்முகாநதி அணையின் நீா்மட்டம் 26.25 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா் இருப்பு 16.88 மில்லியன் கன அடியாக உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கூடலூரில் 1.2 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 33.2 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.