திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், குடிநீருக்காக தண்ணீா் எடுப்பதாலும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

News image

முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).

Updated On :17 ஏப்ரல் 2026, 1:06 am IST

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், குடிநீருக்காக தண்ணீா் எடுப்பதாலும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருவதால் 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெரியாறு அணை நீா்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 10 நாள்கள் மட்டுமே குறைந்த அளவு மழை பதிவானது. தற்போது எதிா்பாா்த்திருந்த மழையும் இந்தப் பகுதியில் பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து மிகவும் குறைந்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.55 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 16 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 200 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 998.45 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீா் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் தேங்கிய நீா் (டெட் ஸ்டோரேஜ்) 104 அடியாக இருந்தாலும், 108 அடிக்கு மேல் உள்ள நீரைமட்டுமே தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியும். எனவே பெரியாறு நீா்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்து நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயா்ந்தால் மட்டுமே அடுத்துவரும் நாள்களில் குடிநீா் தட்டுப்பாட்டை தவிா்க்க முடியும். கோடை மழையும் பொய்த்துப் போனால் 5 மாவட்டங்களிலும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய அணை நீா் இருப்பின்படி இன்னும் சுமாா் ஒரு மாதத்துக்கு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் எடுக்கலாம். அதற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.