தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெரியகுளத்தில் ஏடிஎம் சேதம்: இளைஞா் கைது

பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 12:11 am

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் தென்கரை பகுதியிலுள்ள திரையரங்கம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஒருவா் சேதப்படுத்தியுள்ளாா். அப்போது, அங்கிருந்த காவலாளி கைப்பேசி மூலம் கிளை மேலாளா் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக, அங்கு வந்த மேலாளா் ஏடிஎம் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கருப்பையாவை (32) கைது செய்தனா்.